கிளி ஜோசியரை கொலை செய்தது ஏன்? - கைதான ரகு அதிர்ச்சி வாக்குமூலம்

வழிபோக்கு ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி திருப்பூர் கிளி ஜோசியரை நடுரோட்டில் வெட்டிக் கொன்றதாக கைதான ரகு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிளி ஜோசியரை கொலை செய்தது ஏன்? - கைதான ரகு அதிர்ச்சி வாக்குமூலம்
x
கடந்த மாதம் 24-ம் தேதி திருப்பூரில் ரமேஷ் என்ற கிளிஜோதிடர் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை போலீசார் தேடிய நிலையில், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தபோது, தனது கள்ளக்காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றது தொடர்பாக வழிப்போக்கு ஜோசியரை அணுகியதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் வசியம் செய்த கிளி ஜோதிடர், தம்மை ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தான் கள்ளக்காதலி பிரிந்து சென்றதாகவும் வழிபோக்கு ஜோதிடர், தனக்கு ஜோதிடம் கூறியதாகவும் போலீசில் ரகு தெரிவித்துள்ளார். இதனாலேயே, கிளி ஜோதிடர் ரமேஸை கொலை செய்ததாகவும் ரகு  வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, ரகு மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்