கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெய்வேலி கல்லூரி மாணவி ஒருவரும், ஊமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற மாணவியை அப்பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்ற விஜய், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீசார், விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஜயின் நண்பர்கள் 3 பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வேல்முருகன், முரளி, பிரபுராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story