ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை...

சென்னை தரமணி ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த லிப்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை...
x
சென்னை தரமணி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரயில்வே லிப்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 3 பேர் அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். பின்னர் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் வழக்கு போடுவதாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  மேலும் மாணவியை முதல் தளத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாகவும் தெரிகிறது.  இது தொடர்பான புகாரின் பேரில், புக்கிங் கிளர்க் லோகேஷ், லிப்ட் ஆப்ரேட்டர் லூகாஸ், உள்ளிட்ட இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்