சம்பள முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட குழு : முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை அளிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைதல் மற்றும் 21 மாத நிலுவை தொகைகளை வழங்குவது குறித்து ஆராய ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையில் ஒருநபர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்தது. அது தொடர்பான அறிக்கையை ஐஏஎஸ் அதிகாரி சித்திக் , சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினார். சம்பள முரண்பாடுகள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில் அரசின் நிலைப்பாடாக வரும் 7 ந்தேதி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
Next Story