பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் முறை

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ரேஷன் கடைகளில் நாளை, தொடங்குவதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் முறை
x
* நாளை முதல் வெள்ளி வரை அனைத்து ரேஷன் கடைகளும் காலை 08.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 01.30 முதல் மாலை 05.30 மணி வரையிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

* பகுதி வாரியாக 5 நாட்களில் நாளொன்றுக்கு 300 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 

* ஒவ்வொரு கடையிலும் எந்தெந்த நாளில், எந்தெந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்கிற விவரம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 6 ஆம் தேதி ஒட்டப்படும்.

* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும், நெரிசலுக்கு இடம் தராமல் பெற்றுச் செல்ல வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்