மகனை கொன்றவனை கூலிப்படை மூலம் கொன்ற தாய்...

சென்னையில் மகனை கடத்திச் சென்று கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படையை வைத்து தீர்த்து கட்டிய பெண், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
மகனை கொன்றவனை கூலிப்படை மூலம் கொன்ற தாய்...
x
* சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த கார்த்திகேயன் என்பவர், மின்வாரியத்தில் பணியாற்றி வந்த, கணவனை இழந்த மஞ்சுளா என்பவரை திருமணம் செய்துள்ளார். 

* இருவரும் ரித்தேஷ் என்ற 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில்,  நாகராஜ் என்பவருடன், மஞ்சளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நாகராஜ் - மஞ்சுளா இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

* இது குறித்து தமது தந்தை கார்த்திகேயனிடம் சிறுவன் ரித்தேஷ் கூறி விட, மஞ்சுளாவை, கணவன் கார்த்திகேயன் கண்டித்துள்ளார். 

* இதனையடுத்து, தம்முடன் பேசுவதை மஞ்சுளா நிறுத்தியதால் ஆத்திரமடைந்த நாகராஜ், சிறுவன் ரித்தேஷை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். 

* இந்த கொலை வழக்கில் கடந்த மார்ச் மாதம் சிறை சென்ற நாகராஜ், 2 மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

* மகனை கொடூரமாக கொலை செய்த நாகராஜை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு கூலிப்படையினரை, மஞ்சுளா அணுகியுள்ளார். நான்கு பேர் அடங்கிய கூலிப்படையிடம் பேரம் பேசிய மஞ்சுளா, கடையில் வேலை பார்த்து வந்த நாகராஜை கூலிப்படை மூலம் கொலை செய்தார். 

* திருவண்ணாமலையில் நிகழ்ந்த இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  மஞ்சுளா, கூலிப்படையினர் நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

* ஐந்து பேரையும் விசாரித்த நீதிபதி,  அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மகனை கொலை செய்த கள்ளக்காதலனை 10 மாதங்களுக்குள்ளாக திட்டம் தீட்டி மஞ்சுளா தீர்த்து கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்