கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் - சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்டது காவல்துறை

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
x
ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட போது பணியிலிருந்த ரத்த பரிசோதகர்,  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ரத்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது, ஏற்கனவே துறை ரீதியிலான நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சுகாதாரத்துறையின் அறிக்கை கிடைக்கும் பட்சத்தில், நாளையே விசாரணை தொடங்க சாத்தூர் நகர போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்