தமிழக அரசின் இயக்குநர் செயல்பட இடைக்கால தடை : மத்திய அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு நியமித்த சமூக நலத்திட்ட தணிக்கை குழு இயக்குநர் செயல்பட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
தமிழக அரசின் இயக்குநர் செயல்பட இடைக்கால தடை : மத்திய அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு
x
தமிழக அரசு நியமித்த சமூக நலத்திட்ட தணிக்கை குழு இயக்குநர் செயல்பட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. சமூகநல திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க மத்திய குழுவை உருவாக்கி மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஆனால், அந்தக்குழுவுக்கு அண்ணாமலை பிரேம்குமார் என்பவரை தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணாமலை பிரேம்குமாருக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக, மத்திய தணிக்கை துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்