கஜா புயல் எதிரொலி - சம்பா சாகுபடி பாதிப்பு

'கஜா' புயலின் தாக்கத்தால் சம்பா சாகுபடியின் மகசூல் பாதியாக குறைந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் எதிரொலி - சம்பா சாகுபடி பாதிப்பு
x
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  ஒரத்தநாடு அம்மாபேட்டை வட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்பு ஏக்கருக்கு 30 இருந்து 35 மூட்டைகள் கிடைத்த நிலையில், தற்போது ஏக்கருக்கு 15 மூட்டைகள் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் புயல் பாதித்த பகுதிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்