பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : தொழிலாளர்கள் தவிப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
x
பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம், அண்மையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனைக் கண்டித்து, சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்கள் தொழிற்சாலைகளை மூடி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் இருப்பதால், இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும், விரைவில் பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்