அமைச்சருக்கு முத்தம் கொடுத்து கோரிக்கை வைத்த மூதாட்டி

சென்னை சின்ன போரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் கலந்து கொண்ட தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பென்ஞமின் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
x
பின்னர் ராமாபுரம் ஏரி சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் அமைச்சரின் 2 கைகளையும் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தார். பின்னர் அமைச்சரை தனது வீட்டின் அருகே அழைத்து சென்ற அவர், தங்களது பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அமைச்சர் பெஞ்சமின், உடனடி
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்