இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : பெண்ணின் தாய் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சின்னப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஜவுளிகடை உரிமையாளர் கார்த்திக் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த பெண்ணின் தாய்காயத்ரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்குமாறு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
Next Story