எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது
x
நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர். பணகுடி அருகே கலந்தபனை தெருவைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலமுருகன். இவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகனை தேடி வந்தனர்.  இதையடுத்து தலைமறைவாகியிருந்த பாலமுருகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்