குழந்தைகளுடன் தங்குமிடம் கேட்டு அலைந்த பொதுமக்கள் : அங்குமிங்கும் அலைக்கழித்த அதிகாரிகள்

திருப்பூரில் வீட்டுமனை கேட்டு ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை, அதிகாரிகள் மற்றும் போலீசாரால் விரட்டப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுடன் தங்குமிடம் கேட்டு அலைந்த பொதுமக்கள் : அங்குமிங்கும் அலைக்கழித்த அதிகாரிகள்
x
திருப்பூரில் வீட்டுமனை கேட்டு ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை, அதிகாரிகள் மற்றும் போலீசாரால் விரட்டப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் வசித்த 35 குடும்பத்தினருக்கும் அரசு மாற்றிடம் வழங்கியது. ஆனால், அது தமது இடம் என்று கூறி அங்கிருந்த விரட்டப்பட, அவர்கள் வீரபாண்டி பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். அங்கிருந்தும் விரட்டப்பட்ட அவர்கள், ஆட்சியர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் மற்றும் அதிகாரிகள் விரட்டினர். பிஞ்சுக் குழந்தைகளுடன் புகாரளிக்க வந்தவர்களை அதிகாரிகள் விரட்டி அலைக்கழித்த சம்பவம் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்