பைக்கில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு : வாகனத்தை விட்டு உரிமையாளர் ஓட்டம்

இருசக்கர வாகனத்தில், மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பைக்கில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு : வாகனத்தை விட்டு உரிமையாளர் ஓட்டம்
x
நெல்லை முருகன் குறிச்சியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது, அந்த வாகனத்தில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு ஒன்று சீறியபடி வெளியே வந்துள்ளது.  சுமார் 10 அடி நீளமுள்ள அந்த பாம்பைக் கண்டு, அதிர்ச்சியடைந்த உரிமையாளர் வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டார். 

* வாகனம் கீழே விழுந்ததால், சக்கரத்தில் சிக்கி வெளியே வரமுடியாமல், அந்த பாம்பு சிறிது நேரம் தவித்தது . இதனிடையே பாம்பை பார்க்க  பொதுமக்கள் கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் அந்த பாம்பை பிடித்தனர். அதன் பின்னரே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்