சட்டவிரோத குவாரிகளை இரும்பு கரத்துடன் ஒடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் கருங்கல் வெட்டி எடுத்த நிறுவனத்துக்கு, அது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். அதை ரத்துச் செய்ய கோரி அந்நிறுவன உரிமையாளர் சுப்பாராவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி சுப்பிரமணியம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை அரசு தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். எவ்வளவு பெரிய செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும், கருணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story