காதல் விவகாரம் : இரட்டை கொலை - தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் கைது

காதல் விவகாரத்தில் இரட்டை கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.
காதல் விவகாரம் : இரட்டை கொலை - தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் கைது
x
நெல்லை மாவட்டம் வென்றிலிங்கபுரத்தில், காதல் விவகாரம் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு ரமேஷ் என்ற இளைஞரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையில்,  நீதிராஜா என்பவரும் கடந்த ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சேர்மத்துரை, கோடீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் சமுத்திர பாண்டியை, பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்