பிரேக் பிடிக்காத‌தால் கடைக்குள் புகுந்த லாரி

ஒசூர் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பிரேக் பிடிக்காத‌ லாரி ஒன்று அங்கிருந்த கடைக்குள் புகுந்த‌தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரேக் பிடிக்காத‌தால் கடைக்குள் புகுந்த லாரி
x
நாமக்கலில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்த அந்த சிமெண்ட் லாரியை சக்திவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அக்கொண்டப்பள்ளி அருகே சக்திவேல் லாரியை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், பிரேக் சரியாக இயங்காததால் லாரி சரிவான பகுதியில் தானாக ஓடி ஹார்வேர்டு கடைக்குள் புகுந்த‌து. இதில் ஒரு இருசக்கரவாகனம் உள்பட கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதனால் ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் தாக்கினர்.



Next Story

மேலும் செய்திகள்