கிராமத்திற்குள் குட்டியுடன் நுழைந்த யானை : விடிய விடிய அச்சத்துடன் தவித்த பொதுமக்கள்

கோவை தொண்டாமுத்தூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பெண் யானை தனது குட்டியுடன் ஊருக்குள் நுழைந்தது.
கிராமத்திற்குள் குட்டியுடன் நுழைந்த யானை : விடிய விடிய அச்சத்துடன் தவித்த பொதுமக்கள்
x
கோவை தொண்டாமுத்தூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பெண் யானை தனது குட்டியுடன் ஊருக்குள் நுழைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் பதறியடித்தபடி வீட்டிற்குள் ஓட்டம் பிடித்தனர். அப்போது, ராமர் என்பவரது வீட்டிற்குள் குட்டி யானை நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் விரட்டினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய யானைகள், குளத்துப்பாளையம், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சோளம் , கம்பு, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை திண்றன. அவற்றை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்