101 வயது பெரியவருக்கு கிராம மக்கள் எடுத்த விழா

101 ஆவது வயதில் அடி எடுத்து வைத்துள்ள முதியவர் செபஸ்தியார் என்ற சாமிகண்ணுக்கு ஊர்மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் விழா நடத்தி மகிழ்ந்துள்ளனர்.
101 வயது பெரியவருக்கு கிராம மக்கள் எடுத்த விழா
x
101 ஆவது வயதில் அடி எடுத்து வைத்துள்ள முதியவர் செபஸ்தியார் என்ற சாமிகண்ணுக்கு ஊர்மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் விழா நடத்தி மகிழ்ந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமலை ராயபுரத்தை சேர்ந்த ஆரோக்கியம், நட்சத்திரம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் செபஸ்தியார்.  இரண்டாம் உலகப் போரின் போது,  இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது, சொந்த ஊருக்கு வந்தவர் அஞ்சலகத்தில் பணியாற்றி 1985-ல் ஓய்வு பெற்றுள்ளார்.  இந்நிலையில்,  40-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊர்மக்களும் இணைந்து,  அவரை நேற்று மணமகன் போல்  அலங்கரித்து வண்டியில் வைத்து அந்த கிராமம் முழுவதும் சுற்றி வந்துள்ளனர் .பின்னர் செபஸ்தியாரிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த நிகழ்வால் அந்த கிராமமே விழாக் கோலமாக காட்சியளித்தது.

Next Story

மேலும் செய்திகள்