குட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

குட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
குட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
x
குட்கா ஊழல் வழக்கில், சிபிஐ- யின் சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை - நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை ஆஜர் ஆனார். டெல்லியில் இருந்து வந்திருந்த சிபிஐ அதிகாரிகள், இரவு 8 மணி வரை, விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். முன்னதாக, சனிக்கிழமை காலையில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர்
சரவணன் ஆகியோடரிடம் குட்கா ஊழல் வழக்கு குறித்து, 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், பி.வி.ரமணாவையும் இன்றும் விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்