குட்கா முறைகேடு விசாரணை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
x
 குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளர் சரவணனும் இன்று, சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்