எழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்

சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்
x
சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், 'சர்கார்' பட பிரச்சினையில் பலருக்கு மனப்புழுக்கம் இருந்தது என்றும், இதனால் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், தெரிவித்தார். ஆனால், 21 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததாலும், தாம் பதவியில் தொடர வேண்டும் என்றும் இல்லையேல் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் பாக்யராஜ் சுட்டிக்காட்டினார். எனவே, ராஜினாமாவை வாபஸ் பெற்று, மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும்,  இப்போது எழுத்தாளர் சங்கம் மீது பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்