எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை - 7 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

திருச்சியில், எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை ஒன்று, வாய்க்காலுக்குள் தவறி விழுந்தது.
எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை - 7 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
x
திருச்சியில், எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை ஒன்று, வாய்க்காலுக்குள் தவறி விழுந்தது. சமயபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவர், தனக்கு சொந்தமான லக்கி மணி என்ற யானையை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது வழக்கம். அதுபோல, வயலூரில் காது குத்து நிகழ்ச்சிக்காக சென்று விட்டு நேற்று மாலை சமயபுரம் திரும்பியபோது, வழியில் எருமை மாடுகளை பார்த்து யானை மிரண்டு ஓடியுள்ளது. அங்கிருந்த உய்ய கொண்டான் வாய்க்காலுக்குள் யானை தவறி விழுந்தது. இதையடுத்து, தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் வந்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் இந்த மீட்பு பணிகள் நடைபெற்றன. அதிகாலை 1 மணி அளவில், யானை மீட்கப்பட்டு, சமயபுரம் கொண்டு செல்லப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்