குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு செல்ல மறுக்கும் பொதுமக்கள்

சென்னை ஆர்.ஏ.புரம், பக்கிங்ஹாம் கால்வாய்க்கு அருகில் வீடு கட்டி வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தால் அவர்களின் குடும்ப அட்டையை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு செல்ல மறுக்கும் பொதுமக்கள்
x
சென்னை ஆர்.ஏ.புரத்தில், பக்கிங்ஹாம் கால்வாய்யை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிக்கும் 259 குடும்பத்தினரை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 399 வீடுகள் அகற்றப்பட்டதாகவும், அவர்களுக்கு  குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை காலி செய்ய மறுப்பவர்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்களின் ரேசன் கார்டை திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அவர்கள் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாறிய பின் புது ரேசன் கார்டு வழங்கவும் உத்தரவிட்டனர். அதேபோல ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற மறுப்பவர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசு வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்