அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆர்.பி உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜேஸ்வரி தீக்குளிக்க முயற்சி செய்ய அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அதனைத் தடுத்தனர்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி சிவன் நகரைச் சேர்ந்த அண்ணாதுரையின் மனைவி ராஜேஸ்வரி கணவரை இழந்த இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடியிருக்கும் அரசு புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என தொடர்ந்து  மனு கொடுத்தும் வழங்கப்பட வில்லை என்பதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்சப்பட்டி நகரத்தில் உள்ள 40 அடி உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்ட விடுதார். உடனடியாக அங்கு சென்ற  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தினை ராஜேஸ்வரி கைவிட்டார். இந்நிலையில் இன்று திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜேஸ்வரி தீக்குளிக்க முயற்சி செய்ய அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து செயல்பட்டு அதனைத் தடுத்தனர் இதனைக் கண்ட அமைச்சர், ராஜேஸ்வரிக்கு உடனடியாக பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்