வைகை அணை திறப்பு : விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோகப் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை திறப்பு : விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
x
மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோகப் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. போதிய மழையின்றி தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், வைகை அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதைத் தொடர்ந்து, தண்ணீர் முறை வைத்து  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுரை, திண்டுக்கல் இரு போக பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 5 நாள் மட்டுமே திறக்கப்படும் இந்த நீரை, விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்