சென்னை மாநகராட்சி டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது - ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், லஞ்ச ஊழல் தடுப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது - ஸ்டாலின்
x
* உள்ளூர் சாலைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மழைநீர் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

* சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டதாகவும், பல ஒப்பந்ததாரர்கள் ஒரே கணினியிலிருந்து ஆன்லைன் டெண்டர் போட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

* எனவே இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* இல்லையென்றால் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்