தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி

சென்னை அருகே தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி
x
சென்னை, எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த எபனேசர்-சுதா தம்பதிக்கு, ரெவின்ஸ்டன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு, குழந்தைக்கு பால் ஊட்டி விட்டு தாய் சுதா, அப்படியே தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. காலையில் சுதா எழுந்து பார்த்த போது குழந்தை அசைவற்று கிடந்துள்ளது. குழந்தையை உடனடியாக திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பால் குடிக்கும் போது குழந்தை மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்