போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகள் கொள்ளை :

சென்னையில் போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்
போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகள் கொள்ளை :
x
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த குன்னா பாய் உடல்நலக்குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80 வயதான இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவருடைய மகள் லதா ருக்மணி ஆம்புலன்ஸ் மூலம் உடலை கொண்டு செல்ல முயன்றார். அப்போது ராஜேஷ் என்ற நபர் லதாவிடம் வந்த தான் போலீஸ் என்று கூறிக் கொண்டு சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல உதவியுள்ளார். வீட்டுக்கு வந்து சடலத்தை இறக்கி வைத்த பிறகு குன்னாபாய் மற்றும் லதா ருக்மணி அணிந்திருந்த நகைகளை பாலில் போட வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி நகைகளை பாலில் போட்ட ருக்மணி வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது நகைகளுடன் அந்த நபர் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் லதா ருக்மணி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்