ஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு

ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு
x
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், " ஜெ . ஜெயலலிதா கட்சி" என்ற பெயரில், புதிய கட்சியை பதிவு செய்ய, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து ஜோசப் தொடர்ந்த வழக்கு, சென்னை - உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஜோசப் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்