சுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 கிலோ எடை கொண்ட குழந்தை

சென்னையில் சுகப்பிரசவத்தில் 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 கிலோ எடை கொண்ட குழந்தை
x
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனையில் 39 வயதான ஜெய் ஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது முறையாக பிரசவத்திற்கு வந்த அவருக்கு 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட அழகிய ஆண் குழந்தை சுகப்பிரசவ முறையில் பிறந்தது. தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ள நிலையில் அதிக எடை கொண்ட குழந்தை சுகப்பிரசவ முறையில், இதுவே முதல் முறை என மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்