ஜப்பானின் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஜப்பானின் முன்னணி மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஜப்பானின் முன்னணி மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"கிமோரா" ஜப்பான் நிறுவனத்துடன் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறினார். டியூனா வகை மீன்கள் குறித்த நுணுக்கங்கள் பற்றி மீனவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story