எண்ணெய் கப்பலுக்கு ரூ.2.75 கோடி அபராதம்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரத்தில் எண்ணெய் கப்பலுக்கு 2 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
x
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த மாதம் 'கோரல் ஸ்டார்' என்ற கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது. கடலுக்குள் கலந்த சுமார் 2 டன் கச்சா எண்ணெய் ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், எண்ணெய் கசிவுக்கு காரணமாக 'கோரல் ஸ்டார்' கப்பலுக்கு, கடலோர காவல் படை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.  மேலும், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் வெளியேற விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்