7 பேர் விடுதலை விவகாரம் : மத்திய அரசு பதில் மனு

ராஜீவ் காந்தி கொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
x
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து கடந்த ஏப்ரல் மாதமே மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பதில் அறிக்கை அனுப்பி விட்டதாக  மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, 7 பேர் விடுதலை தொடர்பான எந்த மனுவும் தங்கள் முன் நிலுவையில் இல்லை என்பதால், மனுதாரர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்