பெண்கள் பாதுகாப்புக்காக "181" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
பெண்கள் பாதுகாப்புக்காக 181 உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசு, பெண்களை பாதுகாக்க 181 சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தசேவை, டெல்லி, குஜராத்தை தொடர்ந்து தமிழகத்திலும் இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தொலைபேசி சேவை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைக்கு உளவியல் ரீதியான உதவிக்கு  181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை  தொடர்பு கொண்டால் அதற்குரிய ஆலோசனை வழங்கப்படும். சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பகுதியில் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகிறதோ அந்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக உதவிகள் பெறப்படும் வகையில் இந்த சேவையானது துவங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்