இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : காதலன் கைது - போலீசார் விசாரணை

திருப்பூர் அருகே காதலி தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : காதலன் கைது - போலீசார் விசாரணை
x
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு கார்த்திக் என்பவரை காதலித்து வந்த அப்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு அந்த பெண் திருப்பூர் அருகே பல்லடம் உப்பிலிபாளையத்தில் உள்ள காதலன் கார்த்திக் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் மஞ்சுளா தூக்கு மாட்டிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஞ்சுளாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள்  புகார் அளித்ததால், அவரின் காதலன் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்