30 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவம் : அரசு பள்ளி மாணவர்களின் உலக சாதனை முயற்சி

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், அரசு பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, அம்பேத்கர் உருவ வடிவில் நின்றனர்.
30 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவம் : அரசு பள்ளி மாணவர்களின் உலக சாதனை முயற்சி
x
சென்னையை அடுத்த பூந்தமல்லியில், அரசு பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, அம்பேத்கர் உருவ வடிவில் நின்றனர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, 
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அம்பேத்கர் உருவம் வரையப்பட்டிருந்தது. அதன் மீது, மாணவர்கள் நின்றபடி, அம்பேத்கரின் உருவத்தை பிரதிபலித்தனர். இந்த உலக சாதனை முயற்சியை, 'இந்தியன் வேல்ட் ரெக்கார்ட்' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர். விரைவில், இந்த சாதனை பதிவு செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்