தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு மறுத்த சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை

தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு மறுத்த சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு மறுத்த சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை
x
தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சொத்து வரி விலக்கை ரத்து செய்த தமிழக அரசு, கடந்த ஜனவரி மாதம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. இதை ரத்து செய்யக்கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்