தஞ்சை பெரிய கோயிலுக்குள் தனியார் நிகழ்ச்சிக்கு தடை

தஞ்சை பெரியகோயிலுக்குள் வாழும் கலை அமைப்பு தியான நிகழ்ச்சி நடத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலுக்குள் தனியார் நிகழ்ச்சிக்கு தடை
x
வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்குள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு தியான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது. இதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை அனுமதியளித்தாக தெரிகிறது. நிகழ்ச்சி இன்று தொடங்க இருந்த  நிலையில், பெரிய கோயிலுக்குள் தனியார் விழாக்களுக்கு தடை விதிக்கக்கோரி வெங்கட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு கோயிலுக்குள் தனியார் அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பாக தஞ்சை ஆட்சியர் வரும் 10-ம் தேதி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்