அரசு பணியாளர்கள் விளையாட்டு போட்டி : 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

சேலத்தில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
அரசு பணியாளர்கள் விளையாட்டு போட்டி : 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு
x
சேலத்தில், அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்வமுடன்  பங்கேற்றுள்ளனர். குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்