பிளாஸ்டிக் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விளைநிலத்தில் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டிய லாரியை விவசாயிகள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பிளாஸ்டிக் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு...
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விளைநிலத்தில் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டிய லாரியை விவசாயிகள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். சின்னக்கலையமுத்தூரை சேர்ந்த விவசாயி ஜெயக்குமாரின் வயலில் லாரி ஒன்று குப்பை கொட்டியபடி நின்றது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயக்குமார் மற்றும் கிராம மக்கள், லாரி மற்றும் ஓட்டுனரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அடிக்கடி விளை நிலங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்