பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய ஜவுளிக்கடை அதிபர்...

நெல்லை பேருந்து நிலையம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வரும் நவரத்தினம் என்பவரை காணவில்லை என குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய ஜவுளிக்கடை அதிபர்...
x
நெல்லை பேருந்து நிலையம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வரும் நவரத்தினம் என்பவரை காணவில்லை என குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து நவரத்தினத்தின் செல்போன் எண்ணை டிராக் செய்து, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இருப்பதை அறிந்து போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார், நாகரத்தினம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டனர். உடனடியாக அவரது உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலின் அருகில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்