குறி சொல்வதாக கூறி மூதாட்டியிடம் திருட்டு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம், இளைஞர் ஒருவர் குறி சொல்வதாக கூறி நகை, பணம் திருடிச் சென்றுள்ளார்.
குறி சொல்வதாக கூறி மூதாட்டியிடம் திருட்டு
x
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம், இளைஞர் ஒருவர் குறி சொல்வதாக கூறி நகை, பணம் திருடிச் சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில், பழ வியாபாரம் செய்யும் மல்லிகா என்ற மூதாட்டியிடம் இளைஞர் ஒருவர் குறி சொல்வதாக கூறி, வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் மற்றும் 12 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர்.  அவரிடமிருந்து 12 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்