டாஸ்மாக் கடையில் திருட வந்த மர்ம நபர்கள் : பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு

பழனி அருகே டாஸ்மாக் மதுக்கடையில் திருட வந்தவர்களை, தடுத்த பார் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடையில் திருட வந்த மர்ம நபர்கள் : பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு
x
பழனி அருகே டாஸ்மாக் மதுக்கடையில் திருட வந்தவர்களை, தடுத்த பார் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்த கவுண்டன்வலசு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை, அதன் ஊழியர்கள் நேற்றிரவு வழக்கம் போல், அடைத்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்குள் மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். இதையடுத்து அருகில் தங்கிருந்த பார் ஊழியர்கள் இருவர், திருடர்களை தடுத்துள்ளனர். 



அப்போது, அரிவாளால் அவர்களை மர்ம நபர்கள் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். காயமடைந்த ஊழியர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய திருடர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்