வேளாண் அலுவலர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டிச.12ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது
வேளாண் அலுவலர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
x
தமிழ்நாடு அரசுத் துறையில் வேளாண் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. அதில் மொத்தம் 8 ஆயிரத்து 752  பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்நிலையில்,  நேர்காணல் தேர்வுக்கு முன்பு நடைபெறும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 259 விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய வலைதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 12ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுத் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்