அண்ணா நூலக கலையரங்கில் நிகழ்ச்சி : வாடகை தொகை நிர்ணயித்தது அரசு

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்த வாடகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நூலக கலையரங்கில் நிகழ்ச்சி : வாடகை தொகை நிர்ணயித்தது அரசு
x
1280 பேர் அமரக்கூடிய இந்த கலையரங்கம், முழுவதும் குளிரூட்டப்பட்டது. அரசால் அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, நாளொன்றுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 224 ரூபாய் என வாடகை தொகை நிர்ணயித்துள்ளது. கலை, கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும், மேற்குறிப்பிட்ட தொகையில் இருந்து 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்