புயல் பாதித்த மக்களுக்கு காசிமடம் ரூ.5 லட்சம் நிவாரணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காசி மடம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் காசி மடம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மடத்திற்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம், மன்னார்குடி தாலுகா பைங்காட்டூர், பந்தனநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளது. இதனை 750க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குத்தகைதாரர்களுக்கு காசி மடம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை காசி மடத்தின் அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் ஆலோசனையின் படி காசி மடத்தின் இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் வழங்கினார்.
Next Story