பாம்பன் தூக்குப்பாலத்தில் பழுது சீரமைப்பு - ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்

பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பாம்பன் தூக்குப்பாலத்தில் பழுது சீரமைப்பு  - ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்
x
பாம்பன் தூக்குப்பாலத்தில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, அதனை சீரமைக்கும் பணியில் மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்றைய தினம் தென்னக ரயில்வே பாலங்களின் முதன்மை பொறியாளர் ரவீந்திரபாபு, சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர், ரயில் இன்ஜின் மட்டும் சோதனை ஓட்டமாக தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. 

அவர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே, ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா என்பது தெரியவரும். பாம்பன் தூக்குப்பாலம் பழுதானதை தொடர்ந்து, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிற இடங்களில் இருந்து வரும் முக்கிய ரயில்கள் மட்டும் மண்டபம் வரை இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்