ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் : தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் : தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
x
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் எம். சி. சம்பத் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் இருவரையும், ஸ்டெர்லைட் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் வேல்சங்கர், ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால், சுமார் 80 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார். ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான மன நிலை மாறி, தற்போது, தூத்துக்குடியில் ஆதரவு நிலை காணப்படுவ தாகவும் அவர் விளக்கம் அளித்தார். எனவே, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உதவ வேண்டும் 
என அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்ததாக வேல்சங்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்